சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று கடற்படையினரினால் கைது

2020 மார்ச் 25 ஆம் திகதி ஜெயநகர் கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று கடற்படை கைப்பற்றியது.

இலங்கை கடல் சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்காக கடற்படை அடிக்கடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது, அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் 2020 மார்ச் 25 அன்று ஜெயநகர் கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட ஒரு சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான படகொன்று கண்கானித்தனர். குறித்த படகை மேலும் சோதனை செய்த போது வெடிபொருளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக ஆதாரங்கள் கண்டுபிடிக்க முடிந்தது. கடற்படை சோதனை நடவடிக்கைகள் காரணமாக சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் டிங்கியைக் கைவிட்டு தப்பித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.குறித்த டிங்கி படகு மற்றும் பிற மீன்பிடிபொருட்கள் கடற்படை காவலில் வைக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட டிங்கி படகு, அடையாளம் தெரியாத வெடிபொருள் மற்றும் பிற மீன்பிடி சாதனங்கள் மேலதிக விசாரணைக்காக குச்சவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.