வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் தொற்று நோய்கள் பிரிவை புதுப்பிக்க கடற்படை நடவடிக்கைகள் எடுத்துள்ளது

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் தொற்று நோய்கள் பிரிவை கடற்படையால் புதுப்பிக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் தொற்று நோய்கள் பிரிவை நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக வழங்கும் நோக்கில் புதுப்பிக்க இலங்கை கடற்படை இன்று (2020 மார்ச் 23) நடவடிக்கை எடுத்துள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், வடமத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் லலித் திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட சிவில் பொறியாளர் பிரிவின் கடற்படை வீரர்களால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. எனவே, கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அதன் தேவை உணரப்பட்டால், அதன் வசதிகளை விரிவுபடுத்துவதற்கான கட்டுமானப் பணிகளும் நடந்து வருகின்றன.

மேலும், எதிர்காலத்தில் கொரோனா வைரஸின் பரவலைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேம்படுத்த கடற்படை உறுதியாக உள்ளது.