கேரள கஞ்சா கொண்ட ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து இன்று (2020 மார்ச் 27,) தலைமன்னார் ஊருமலை பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது சுமார் 700 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

வடமத்திய கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் தலைமன்னார் காவல்துறையினருடன் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது ஊரடங்கு நேரத்தில் இந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவரை கைது செய்தனர். சந்தேக நபரிடமிருந்து மேலும் விசாரித்த பின்னர் அருகிலுள்ள காட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 700 கிராம் கேரள கஞ்சா அடங்கிய பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, சந்தேகநபர் கேரள கஞ்சாவுடன் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இந்த பகுதியில் வசிக்கும் 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டார். தலைமன்னார் பொலிஸாரால் குறித்த சந்தேகநபர் மற்றும் கேரள கஞ்சா குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.