கடற்படை முருங்கன் பகுதியிலிருந்து ஒரு கைக்குண்டை கண்டுபிடித்துள்ளது

இலங்கை கடற்படை 2020 மார்ச் 27 ஆம் திகதி முருங்கன் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது யோத வெவ அருகில் இருந்து ஒரு கைக்குண்டு கண்டுபிடித்துள்ளது.

வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழு, முருங்கன் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது யோத வெவ அருகில் இருந்து, இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கைக்குண்டு எம் 75 வகை நேரடி கையெறி என்று உறுதி செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைக்காக அடம்பன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.