சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது

2020 மார்ச் 27 ஆம் திகதி முல்லைதீவு, புதுமாதலன் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட பதினான்கு (14) மீனவர்களுடன் 05 படகுகள் கடற்படையால் கைது செய்யப்பட்டது.

சட்டவிரோத மீன்பிடி முறைகளைத் தடுக்க கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் 2020 மார்ச் 27 ஆம் திகதி முல்லைதீவு, புதுமாதலன் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட பதினான்கு (14) மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அங்கு கடற்படை ஐந்து டிங்கி படகுகள், ஒரு சட்டவிரோத வலை (01), 4,000 கிலோவுக்கு மேற்பட்ட மீன், ஒரு ஜீப் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்களையும் கைப்பற்றியது. கைது செய்யப்பட்டவர்கள் புதுமாதலன் பகுதியில் வசிப்பவர்கள் என கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபர்கள், டிங்கி படகுகள், ஜீப் வண்டி, சட்டவிரோத மீன்பிடி வலை மற்றும் பிற மீன்பிடி உபகரணங்களை மேலதிக விசாரணைகளுக்காக முல்லைதீவு மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.