போதைப்பொருட்களுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையால் கைது

2020 மார்ச் 28 ஆம் திகதி நொரொச்சோலை ஹஜரவத்த பகுதியில் நோரோச்சோலை பொலிஸாருடன் ஒருங்கிணைந்து கடற்படை மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் போது போதைப்பொருள் விற்பனைக்கு கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்களை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தடுக்க கடற்படை தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி மற்றொரு நடவடிக்கை 2020 மார்ச் 28 அன்று வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் நொரொச்சோலை பொலிஸார் இனைந்து நொரொச்சோலை ஹஜரவத்த பகுதியில் மேற்கொண்டுள்ளனர். நாட்டில் ஊரடங்கு உத்தரவு விதித்த போதிலும் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்ட இருவரை கண்கானித்த கடற்படையினர் அவர்களை சோதனை செய்த போது 01 கிராம் மற்றும் 370 மி.கி ஹெராயின், 370 மி.கி மெத்தாம்பேட்டமைன் (ஐஸ்) மற்றும் 01 கிராம் மற்றும் 120 மி.கி கேரள கஞ்சா ஆகியவை அவர்களிடம் கண்டுபிடித்தனர். அதன் பின் குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் கடற்படையால் கைது செய்யபட்டதுடன் அவர்கள் இந்த போதைப்பொருள்களை விற்பனைக்கு எடுத்து சென்றதாக மேலும் தெரியவந்துள்ளது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள் 20 மற்றும் 29 வயதுடைய அதே பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து நொரொச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.