கடற்படையால் காலி நீதிமன்ற வளாகத்தில் கிருமி நீக்கம் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

புதிய கொரோனா வைரஸை நாட்டில் பரவாமல் தடுக்க இன்று (2020 மார்ச் 29) கடற்படை காலி நீதிமன்ற வளாகத்தில் கிருமி நீக்கம் செய்யும் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தல்களின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற கிருமி நீக்கம் செய்யும் திட்டத்தின் தெற்கு மாகாணத்தை மையமாகக் கொண்ட மற்றொரு திட்டம் இன்று (2020 மார்ச் 29) தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கஸ்ஸப பொலின் வழிகாட்டுதலின் கீழ் காலி நீதிமன்ற வளாகம் மையமாக கொண்டு நடத்தப்பட்டது. கடற்படையின் வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) அவசரநிலை பதிலளிப்பு பிரிவு செயல்படுத்திய இந்த திட்டம் மூலம் காலி நீதிமன்ற வளாகத்தில் உள்ள உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றம் முறையான நடைமுறைகள் படி கிருமி நீக்கம் செய்யப்பட்டது.

மேலும், இதுபோன்ற பொது இடங்களை கிருமி நீக்கம் செய்வதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பங்களிக்க கடற்படை தயாராக உள்ளது.