இலங்கை கடற்படை புத்தளம் பகுதியில் பல இடங்களை கிருமி நீக்கம் செய்து வருகிறது

புதிய கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுக்க இன்று (2020 மார்ச் 29) புத்தளம் பகுதியில் கிருமி நீக்கம் செய்யும் திட்டமொன்று கடற்படை மேற்கொண்டுள்ளது.

புதிய கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் கூட்டு பொறிமுறையை ஆதரித்து, 2020 மார்ச் 29, அன்று, இலங்கை கடற்படை, புத்தளம் வனவிலங்கு அலுவலகம், பிரதேச செயலகம் மற்றும் கடுமயாங்குளம் கிராமத்தை கிருமி நீக்கம் செய்தது. புத்தளம் காவல்துறையினரின் வேண்டுகோளின்படி, கடற்படையின் வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) அவசரகால பதிலளிப்பு பிரிவு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் த சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கிருமி நீக்கம் செய்யும் திட்டத்தை மேற்கொண்டது.

இங்கு அனைத்து இடங்களையும் உள்ளடக்கும் வகையில் கிருமி நீக்கம் செய்யும் திட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன் வைரஸ் பரவாமல் தடுக்கும் செயல்பாடுகளில் அரசாங்கத்திற்கு உதவ கடற்படை அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது.