வெற்றிகரமாக நிறைவடைந்த கூட்டு ஒருங்கிணைந்த பரிவர்த்தனை பயிற்சியின் 2020/1 (JCET) சான்றிதழ் வழங்கும் விழா திருகோணமலையில்

2020 மார்ச் 02 ஆம் திகதி திருகோணமலை சிறப்பு படகு படைத் தலைமையகத்தில் தொடங்கிய இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க இராணுவம் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு ஒருங்கிணைந்த பரிவர்த்தனை பயிற்சியை 2020/1 (Joint Combined Exchange Training 2020/1) வெற்றிகரமாக நிறைவு செய்த கடற்படையினருக்கு சான்றிதழ் வழங்கும் விழா இன்று (2020 மார்ச் 30,) நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கிழக்கு கடற்படை கட்டளையின் துணை தளபதி கொமடோர் சஞ்சீவ டயஸ் கலந்து கொண்டார். மேலும் இந் நிகழ்ச்சியில் 4வது துரித தாக்குதல் ரோந்து படகு படையின் கட்டளை அதிகாரி, சிறப்பு படகு படையின் கட்டளை அதிகாரி, ஆல்பா 1333 அமெரிக்க சிறப்புப் படை கடற்படையினர், 4வது துரித தாக்குதல் ரோந்து படகு படையின் கடற்படையினர் மற்றும் சிறப்பு படகு படையின் சேர்ந்த கடற்படையினர் கலந்து கொண்டனர். இந்த பாடத்திட்டத்தில் சிறப்புப் படகுப் படையில் 24 கடற்படை வீரர்களும், 4வது துரித தாக்குதல் ரோந்து படகு படையின் 11 கடற்படை வீரர்களும் கழந்துகொண்டுள்ளதுடன் ஆல்பா 1333 அமெரிக்க சிறப்புப் படைகளின் ஆறு பயிற்சியாளர்களால் இந்த பாடநெரி மேற்கொள்ளப்பட்டது.

மேலும், நான்கு வார பயிற்சி காலத்தில் மனித உரிமைகள், நில தற்காப்பு சட்டம், தந்திரோபாய பாதுகாப்பு கட்டளை பாதுகாப்பு, இலக்கு படப்பிடிப்பு, சட்டவிரோத கடல் வழங்கல் கோடுகள், இராணுவ முடிவெடுப்பது, தொழில்முறை திறன் மேம்பாடு ஆகிய பாடங்கள் மற்றும் செயல்பாட்டு துறைகளில் அமெரிக்க இராணுவம் மற்றும் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது அதன் மூலம் அமெரிக்க இராணுவம் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை கடற்படை உறுப்பினர்கள் இடையே அறிவு மற்றும் அனுபவங்களை பரிமாற்றப்பட்டது