ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர் கடற்படையால் கைது

2020 மார்ச் 31 ஆம் திகதி பாலவிய, கரம்ப பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபரை (01) கடற்படை கைது செய்தது.

போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இலங்கை கடற்படை, நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருட்களைத் தடுப்பது குறித்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி வட மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் 2020 மார்ச் 31 ஆம் திகதி பாலவிய, கரம்ப பகுதியில் சோதனை நடவடிக்கை யொன்று மேற்கொண்டனர் அங்கு சந்தேகத்திற்கிடமான வீடொன்று சோதனை செய்த போது 2 கிராம் மற்றும் 310 மிலி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

23 வயதுடைய குறித்த சந்தேக நபர் போதைப்பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நொரொச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.