நயினாதீவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல கடற்படை ஆதரவு

யாழ்ப்பாணம், நயினாதீவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல இலங்கை கடற்படை 2020 மார்ச் 31 ஆம் திகதி தனது பங்களிப்பை வழங்கியது.

நாட்டில் புதிய கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, மேலும் பொதுமக்களின் வீடுகளுக்கு அத்தியாவசிய உணவு மற்றும் வீட்டுப் பொருட்களை வழங்க மற்றொரு திட்டம் மேற்கொள்கிறது. அதன்படி, 2020 மார்ச் 31 ஆம் திகதி, நயினாதீவின் மக்களுக்கு சதொச விற்பனை நிலையங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் திட்டமொன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த தேவையான கடல் போக்குவரத்து வசதிகள், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் த சில்வாவின் உத்தரவின் கீழ் கடற்படை துணைத் தலைமை பணியாளர் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் மேற்பார்வையின் கிழ் வழங்கப்பட்டது.

மேலும், ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவ கடற்படை தொடர்ந்து இதேபோன்ற சமூக பொறுப்புத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.