சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது

புல்மோட்டை அரிசிமலை கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு குழுவை 2020 மார்ச் 31, அன்று கடற்படை கைது செய்துள்ளது.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதில் இலங்கை கடற்படை ஆர்வமாக உள்ளது. அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் புல்மோட்டை அரிசிமலை பகுதியில் கடல் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்யப்பட்டதுடன் அவர்களிடம் அனுமதி பத்திரங்கள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதன்படி, ஆறு (06) நபர்கள், ஒரு டிங்கி மற்றும் பல மீன்பிடி உபகரணங்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்கள் 37 முதல் 54 வயதுக்குட்பட்ட புல்மோட்டை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் பறிமுதல் செய்யப்பட்ட டிங்கி படகு மற்றும் பிற மீன்பிடி சாதனங்கள் மேலதிக விசாரணைகளுக்காக புல்மோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.