ஹெரொயின் கொண்ட ஒருவர் கடற்படையால் கைது

கற்பிட்டி மண்தல்குடா பகுதியில் இன்று (2020 ஏப்ரல் 01) சுமார் 40 மி.கி ஹெராயின் கொண்ட ஒருவரை இலங்கை கடற்படை கைது செய்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு சூழ்நிலையை கட்டுப்படுத்த மகத்தான பங்களிப்பை வழங்குகின்ற கடற்படை, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளையும் தொடர்கிறது. அதன்படி, வடமேற்கு கடற்படைக் கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படையினர் குழு கற்பிட்டி மண்தல்குடா பகுதியில் இன்று (2020 ஏப்ரல் 01) ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன் அங்கு சந்தேகத்திற்கிடமான வீட்டொன்றை பரிசோதித்த பின்னர் விற்பனைக்கு தயாராகவுள்ள 40 மில்லிகிராம் ஹெராயினுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

33 வயதான சந்தேகநபருடன் ஹெராயின் மேலதிக விசாரணைக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.