Metallurgical Corporation of China LTD நிறுவனம் மூலம் கடற்படைக்கு பல சுகாதார உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக சீன மக்கள் குடியரசின் Metallurgical Corporation of China LTD நிறுவனம் இன்று (2020 ஏப்ரல் 02) பல சுகாதார உபகரணங்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து நன்கொடையாக வழங்கியது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் ஆலோசனையின் கீழ் கடற்படை பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த திட்டங்களுக்காக நிதி மற்றும் பொருட்கள் உதவிகளை வழங்குவதன் மூலம் மாநில மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆதரிக்கின்றன. அதன்படி, இன்று (2020 ஏப்ரல் 02) சீன மக்கள் குடியரசின் Metallurgical Corporation of China LTD நிறுவனம் 1800 பாதுகாப்பு முகமூடிகள் மற்றும் 2000 பாதுகாப்பு கையுறைகள் கடற்படைத் தலைமையகத்தில் வைத்து கடற்படைத் தளபதியிடம் ஒப்படைத்துள்ளது. நாட்டில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை மேற்கொள்கின்ற தொடர்ச்சியான நடவடிக்கைகளை நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வந்த பிரதிநிதிகளால் மிகவும் பாராட்டப்பட்டன.

மேலும், இந்த நன்கொடைகள் கடற்படைக்கு வழங்குவது தொடர்பாக கடற்படைத் தளபதி இந்த நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.