நிகழ்வு-செய்தி

Metallurgical Corporation of China LTD நிறுவனம் மூலம் கடற்படைக்கு பல சுகாதார உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக சீன மக்கள் குடியரசின் Metallurgical Corporation of China LTD நிறுவனம் இன்று (2020 ஏப்ரல் 02) பல சுகாதார உபகரணங்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து நன்கொடையாக வழங்கியது.

02 Apr 2020

கொரோனா நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற நபர்களை சோதனை செய்வதற்காக நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை கடற்படையால் புதுபிக்கப்பட்டது

இலங்கை கடற்படை இன்று (2020 ஏப்ரல் 2,) கொரோனா நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற நபர்களின் எச்சில் மற்றும் இரத்த மாதிரிகள் சோதனை செய்வதுற்கு தேவையான வசதிகள் கொண்ட ஒரு இடத்தை நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையில் தயாரித்தது.

02 Apr 2020

இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த இரத்த தான திட்டமொன்று ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனையில் இடம்பெற்றது

ஹம்பாந்தோட்டை கடற்படை முகாம் மற்றும் ஹம்பாந்தோட்டை இரத்தமாற்றம் திணைக்களம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான திட்டமொன்று 2020 ஏப்ரல் 01 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனை வளாகத்தில் கடற்படை பணியாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

02 Apr 2020

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களைக் கொண்ட இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

2020 ஏப்ரல் 01 ஆம் திகதி குச்சவேலி பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களைக் கொண்ட இரண்டு நபர்கள் (02) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

02 Apr 2020

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட முதல் குழு மையத்தை விட்டு வெளியேறியது.

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இரண்டு வார கால மருத்துவ பரிசோதனைகளை நிறைவு செய்த முதல் குழு மருத்துவ பரிசோதனை சான்றிதல்களுடன் இன்று 2020 ஏப்ரில் 01ஆம் திகதி வெளியேறினர்.

02 Apr 2020