மாட்டிறைச்சி கொண்ட இருவர் (02) மற்றும் ஊரடங்கு சட்டத்தை மீறிய இருவர் (02) கடற்படையால் கைது

34 கிலோ கிராம் மாட்டிறைச்சி கொண்ட இருவர் மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு சந்தேக நபர்கள் (02) ஆருகம்பை பகுதியில் மேற்கொள்ளபட்ட ரோந்துப் பயணத்தின் போது 2020 ஏப்ரல் 03 அன்று மூன்று சந்தர்ப்பங்களில் கடற்படையால் கைது செய்யப்பட்டது.

நாட்டில் பேரழிவு நிலைமை கட்டுப்படுத்த மற்றும் பொது மக்களின் பாதுகாப்பிற்காக தீவு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுபவர்களையும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களையும் கைது செய்ய இலங்கை கடற்படை ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இன்று (2020 ஏப்ரல் 3,) தென்கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மேற்கொண்டுள்ள ரோந்துப் பணியின் போது ஊரடங்கு சட்டத்தை மீறி சாலையில் பயணித்த சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்று மற்றும் மோட்டார் சைக்கிளொன்று அவதானித்தனர். பின்னர் முச்சக்கர வண்டியை மற்றும் மோட்டார் சைக்கிளைசோதனை செய்த போது முச்சக்கர வண்டியில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 27 கிலோகிராம் மாட்டிறைச்சியும் மோட்டார் சைக்கிளில் இருந்து 07 கிலோகிராம் மாட்டிறைச்சியும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் படி முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

மேலும். ஊரடங்கு சட்டத்தை மீறி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை கடற்படை கைது செய்தது. இவ்வாரு கைது செய்யப்ப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் 24 மற்றும் 30 வயதுடைய பொத்துவில் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர், குறித்த சந்தேகநபர்கள், மாட்டிறைச்சி, முச்சக்கர வண்டி மற்றும் 02 மோட்டார் சைக்கிள்கள் மேலதிக விசாரணைக்காக பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.