பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த இரண்டாவது குழு புறப்பட்டது

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த இரண்டாவது குழுவினர் இன்று (2020 ஏப்ரல் 03) தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டனர்.

அதன்படி, பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்த இரண்டாவது (02) குழுவாக ஆறு (06) இலங்கையர்கள் இன்று (2020 ஏப்ரல் 03) மையத்தை விட்டு வெளியேறினர். புறப்பட்ட குழுவினருக்கு தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழை இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தின் கட்டளை அதிகாரியவர்களால் வழங்கப்பட்டன.

அதன் படி, தற்போது வரை, தனிமைப்படுத்தலை முடித்த 11 பேர் மையத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இதற்கிடையில், மேலும் 66 இலங்கையர்கள் தற்போது பூஸ்ஸ தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இலங்கை கடற்படை பல தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளதுடன் நாட்டில் வைரஸ் பரவாமல் தடுப்பதில் அரசாங்கத்திற்கு உதவ கடற்படை பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.