நெடுந்தீவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல மற்றும் விநியோகிக்க கடற்படை ஆதரவு

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல மற்றும் விநியோகிக்க இலங்கை கடற்படை 2020 ஏப்ரல் 03 ஆம் திகதி தனது பங்களிப்பை வழங்கியது.

நாட்டில் புதிய கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக அத்தியாவசிய உணவு மற்றும் வீட்டுப் பொருட்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் திட்டமொன்று அரசாங்கம் தொடங்கியுள்ளது. அதன் படி 2020 ஏப்ரல் 03 ஆம் திகதி, நெடுந்தீவின் மக்களுக்கு சதொச விற்பனை நிலையங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த தேவையான கடல் போக்குவரத்து வசதிகள் மற்றும் இந்த பொருட்களை தீவில் விநியோகிக்க தேவையான உதவிகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் த சில்வாவின் உத்தரவின் கீழ் கடற்படை துணைத் தலைமை பணியாளர் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் மேற்பார்வையின் கிழ் வழங்கப்பட்டது.

மேலும், ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொள்ளும் யாழ் தீவுகளில் வசிக்கும் மக்களுக்கு உதவ கடற்படை தொடர்ந்து இதேபோன்ற சமூக நலத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.