பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மற்றொரு குழு வெளியேறல்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த மற்றொரு குழுவினர் இன்று (2020 ஏப்ரல் 06) தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டனர்.

அதன்படி, பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்த மற்றொரு குழுவாக 11 இலங்கையர்கள் இன்று (2020 ஏப்ரல் 06) மையத்தை விட்டு வெளியேறினர். புறப்பட்ட குழுவினருக்கு தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழை இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தின் கட்டளை அதிகாரியவர்களால் வழங்கப்பட்டன. மேலும், இந்த சந்தர்ப்பத்தில், தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்த நபர்களால் கடற்படையின் உறுதிப்பாட்டைப் பாராட்டுவதற்காக உருவாக்கப்பட்ட சில நினைவு பரிசுகள் கடற்படை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன.

அதன் படி, தற்போது வரை, தனிமைப்படுத்தலை முடித்த 22 பேர் மையத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இதற்கிடையில், மேலும் 57 இலங்கையர்கள் தற்போது பூஸ்ஸ தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இலங்கை கடற்படை பல தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளதுடன் நாட்டில் வைரஸ் பரவாமல் தடுப்பதில் அரசாங்கத்திற்கு உதவ கடற்படை பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.