கடற்படை மேலும் பல கிருமி நீக்கும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது

நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட பல கிருமி நீக்கும் திட்டங்கள் 2020 ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை, புத்தளம் பொலிஸ் நிலையம், ரூபாவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் புத்தளம் சஹீரா முஸ்லிம் கல்லூரியில் நிறுவப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையம் மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் கடற்படை வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) அவசரநிலை பதிலளிப்பு பிரிவு மூலம் இந்த கிருமி நீக்கும் செய்யும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு இந்த நிறுவனங்களின் அனைத்து இடங்களும் உள்ளடக்கி முறையாக கிருமி நீக்கும் செய்யப்பட்டன.

எதிர்காலத்திலும் வைரஸ் பரவுவதைத் தடுக்க பொது இடங்கள் மையமாகக் கொண்டு பல கிருமி நீக்கும் செய்யும் திட்டங்களை செயல்படுத்த கடற்படை திட்டமிட்டுள்ளது.