வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள வெலிஸர, எலபிட்டிவல மக்களுக்காக கடற்படை மேற்கொண்டுள்ள பொழுதுபோக்கு திட்டம்

கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள மண்டலங்களாக அரசாங்கத்தால் பெயரிடப்பட்ட மாவட்டங்களில் உள்ள வீடுகளில் தங்கியிருக்கும் மக்களின் மன அழுத்தத்தைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடைமுறைகளுக்கு ஆதரவாக கடற்படை 2020 ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் கொழும்பு பகுதியில் உள்ள மாடி கட்டடங்களில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக இசை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன் படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்ச்சிகளின் ஒரு நிகழ்ச்சி, 2020 ஏப்ரல் 6 ஆம் திகதி வெலிஸர, எலபிட்டிவல மாடி கட்டடங்களில் வசிப்பவர்களுக்காக நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் போது, கொரோனா வைரஸைத் தவிர்ப்பதற்கான சுகாதார நடைமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, எதிர்காலத்தில் இதே போன்ற திட்டங்களை ஏற்பாடு செய்ய கடற்படை திட்டமிட்டுள்ளது.