கொழும்பு கடற்படை பொது மருத்துவமனையில் நீண்டகால சிகிச்சை பெறும் நோயாளிகளின் மாதாந்திர மருந்துகளை அவர்களின் வீடுகளுக்கு வழங்கும் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டது

கொழும்பு கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணியாற்றும் கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நாட்டில் உள்ள தற்போதைய சூழ்நிலையின் கீழ் மாதாந்திர மருந்துகளை பெறுவதுக்காக எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இவர்களின் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் திட்டமொன்று இன்று 2020 ஏப்ரல் 08 ஆம் திகதி செயல்படுத்தப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தல்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் நீண்ட காலமாக சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு மருந்துகளை விநியோகிக்கப்பட்டது. மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட கடைசி மருந்துகளை இவ்வாரு விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்டன. கொழும்பு, கம்பஹ, கண்டி, குருநாகல், கேகாலை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகள் மையமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மருத்துவர்களால் கடைசியாக பரிந்துரைக்கப்பட்ட 168 மருந்து தொகுப்புகள் தங்களுடைய மருந்துகளை சமர்ப்பித்த உறுப்பினர்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்டன.

பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் விநியோகம் கடற்படை மருத்துவ அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டதுடன் எதிர்காலத்திலும் இதே போன்ற திட்டங்களை செயலபடுத்த கடற்படை தயாராக உள்ளது.