தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் தொடர் இன்னிசை நிகழ்ச்சிகள்

கொழும்பு பகுதியில் மாடி கட்டடங்களில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் இன்னிசை நிகழ்ச்சி தொடரின் மேலும் இரண்டு இசை நிகழ்ச்சிகள் 2020 ஏப்ரல் 11 ஆம் திகதி கெத்தாராமை மற்றும் கிராண்ட் பாஸ் பகுதிகளில் உள்ள மாடி வீடுகள் மையமாகக் கொண்டு இடம்பெற்றது.

அரசாங்கத்தால் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள மண்டலங்களாக பெயரிடப்பட்ட மாவட்டங்களில் உள்ள வீடுகளில் தங்கியிருக்கும் மக்களின் மன அழுத்தத்தைத் தவிர்க்க அரசாங்கம் மேற்கொள்ளும் நடைமுறைகளுக்கு ஆதரவாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில் கொழும்பு பகுதியில் மாடி கட்டடங்களில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக கடற்படை 2020 ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றது.

அதன் படி, இந்த தொடர் நிகழ்வின் மற்றொரு நிகழ்வு, 2020 ஏப்ரல் 11 ஆம் திகதி கெத்தாராமை மாடி வீட்டு வளாகம் மற்றும் கிராண்ட் பாஸ் பகுதியில் ஜனசெவன வீடு வளாகம் மையமாகக் கொண்டு நடத்தப்பட்டதுடன் மேலும், நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பங்களிப்புடன், அப்பகுதி மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்குகளை வழங்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. இந் நிகழ்ச்சியின் போது, கொரோனா வைரஸைத் தவிர்ப்பதற்கான சுகாதார நடைமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, எதிர்காலத்திலும் இதே போன்ற திட்டங்களை ஏற்பாடு செய்ய கடற்படை திட்டமிட்டுள்ளது.