ஜா-எல சுதுவெல்ல பகுதியிலிருந்து கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிய 28 நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த மேலும் 52 பேர் கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டன

ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 28 பேர் குறித்த சுய தனிமைப்படுத்தலை மீறியமை தொடர்பில் 2020 ஏப்ரல் 09 ஆம் திகதி கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டு முறையான தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்காக ஒலுவில் உள்ள இலங்கை கடற்படையின் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.

அதன்படி, கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டு ஒலுவில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்ட 28 பேரில் 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என கண்டறியப்பட்டது.இதன் விளைவாக, இந்த ஆறு நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பிற நபர்களைத் தேடி கடற்படையின் புலனாய்வுப் பிரிவும், ஜா-எல காவல்துறையும் 2020 ஏப்ரல் 11 ஆம் திகதி, ஜா-எல மற்றும் மாகெவிட்ட பகுதிகள் மையமாகக் கொண்டு ஒரு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஜா-எல பகுதியைச் சேர்ந்த 43 பேரும், மாகெவிட்ட பகுதியைச் சேர்ந்த 9 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 42 ஆண்களும் 10 பெண்களும் உள்ளனர். இந்த குழுவில் 03 சிறிய சிறுவர்களும் 3 சிறுமிகளும் உள்ளனர்.

நிலவும் சூழ்நிலை காரணமாக, இப்பகுதியில் வசிப்பவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த குழு ஆரம்ப சுகாதார பரிசோதனைக்குப் பிறகு ஒலுவில் பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்படும்.