கடற்படை பெல்லன்வில ரஜமஹா விஹாரையில் கிருமி நீக்கும் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது

நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட மேலும் ஒரு கிருமி நீக்கும் திட்டம் இன்று (2020 ஏப்ரல் 12) பெல்லன்வில ரஜமஹா விஹாரையில் இடம்பெற்றது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் கடற்படை வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) அவசரநிலை பதிலளிப்பு பிரிவு மூலம் இந்த கிருமி நீக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. வைரஸ் பரவாமல் தடுக்க இந்த விஹாரையில் அனைத்து இடங்களையும் முறையாக கிருமி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த கொடிய வைரஸ் பரவுவதைத் கட்டுபடுத்த கடற்படை உட்பட பிற பாதுகாப்புப் படையினரால் எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகள் குறித்து விஹாரயின் பிரதான சங்கத்தேரர் பெல்லன்வில தம்மரதன தேரர் பாராட்டினார்

எதிர்காலத்திலும் வைரஸ் பரவுவதைத் தடுக்க பொது இடங்கள் மையமாகக் கொண்டு பல கிருமி நீக்கும் திட்டங்களை செயல்படுத்த கடற்படை திட்டமிட்டுள்ளது.