அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த மற்றும் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 17 நபர்கள் கடற்படையினரால் கைது

மன்னார் படைதுரை பகுதிக்கு மேற்கு கடல் பகுதியில் 2020 ஏப்ரல் 14 ஆம் திகதி கடற்படை மேற்கொண்டுள்ள ரோந்துப் பணியின் போது அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த மற்றும் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 17 நபர்கள் கைது செய்யப்ட்டனர்.

இலங்கை கடல் பகுதியில் கடல் வளங்களை மற்றும் மீன் வளங்களை பாதுகாக்க இலங்கை கடற்படை தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மன்னார் படைதுரை பகுதிக்கு மேற்கு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான 05 மீன்பிடி படகுகள் கண்கானித்தனர். குறித்த படகுகள் தொடர்பான மேலதிக விசாரணையில் அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த மற்றும் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 17 நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் மீன்பிடி படகுகள், 30 கிலொ கிராம் மீன், 115 கடல் அட்டைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களும் கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்கள் 20 முதல் 56 வயதுக்கு உட்பட்ட மன்னார் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். குறித்த சந்தேகநபர்கள், மீன்பிடி படகுகள், கடல் அட்டைகள், மீன் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் மன்னார் மீன்வள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.