சட்டவிரோத உள்ளூர் மதுபானங்களுடன் 02 நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை 2020 ஏப்ரல் 14 ஆம் திகதி, நொரொச்சோலை இருந்து தலுவ கரம்ப பகுதி வரை நடத்தப்பட்ட ரோந்துப் பணியின் பொது சட்டவிரோத உள்ளூர் மது உற்பத்தி செய்யப்படும் இடமொன்று சோதனை செய்யப்பட்டதுடன் அங்குரிந்து சட்டவிரோத உள்ளூர் மதுபானங்களுடன் 02 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் அதே வேளையில், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவும் இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் 2020 ஏப்ரல் 14 ஆம் திகதி நொரொச்சோலை இருந்து தலுவ கரம்ப பகுதி வரை நடத்தப்பட்ட ரோந்துப் பணியின் பொது சேதபோல பகுதியில் உள்ள ஒரு சதுப்பு நிலத்தில் சட்டவிரோதமாக மதுபானம் வடிகட்டிய 02 நபர்களை கைது செய்தது. இந்த நடவடிக்கையின் போது, சுமார் 750 லிட்டர் சட்டவிரோத மதுபானம் மற்றும் அதை வடிகட்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கடற்படை காவலுக்கு வைக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்கள் அதே பகுதியில் வசிக்கின்ற 22 மற்றும் 31 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சட்டவிரோத மதுபானம் மற்றும் வடிகட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் நொரொச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.