ஒலுவில் பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கு புத்தாண்டு உணவு வழங்கப்பட்டன

ஒலுவில் பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கு புத்தாண்டு உணவு வழங்கும் நிகழ்வொன்று 2020 ஏபரல் 14 ஆம் திகதி கடற்படையினரால் மேற்கொள்ளபட்டது.

உலகளாவிய தொற்றுநோயாக பரவுகின்ற கொரோனா வைரஸ் இலங்கையில் பரவாமல் கட்டுப்படுத்த நாட்டின் அனைத்து மக்களுக்காக தங்களது அன்பானவர்களிடமிருந்து விலகி ஒலுவில் துறைமுக வழாகத்தில் நிறுவப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் வெற்றிகரமாக தனிமைப்படுத்தலில் ஈடுபடுகின்ற நபர்களுக்கு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக புத்தாண்டு உணவு வழங்கும் நிகழ்வொன்று 2020 ஏபரல் 14 ஆம் திகதி கடற்படையினரால் மேற்கொள்ளபட்டது.

இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தற்போது 75 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து விடுவிப்பதற்கு முன்னர் அவர்களுக்கு முறையான தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைகளின் படி சிறந்த சேவையை வழங்க கடற்படை உறுதியாக உள்ளது.