கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ் புத்தலம் காவல் நிலையத்திக்கு கிருமிநாசினி அறையொன்று வழங்கப்பட்டன

கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ் கடற்படையினரால் நிர்மானிக்கப்பட்ட கிருமிநாசினி அறையொன்று இன்று (2020 ஏப்ரல் 15 ) புத்தலம் காவல் நிலையத்திக்கு வழங்கப்பட்டன.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் நேரடி மேற்பார்வையால் மேற்கொள்ளபட்டுகின்ற கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ், வடமேற்கு கடற்படை கட்டளையின் மோட்டார் போக்குவரத்து பட்டறை மற்றும் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்தின் சிவில் பொறியியல் துறையின் கடற்படையினரால் நிர்மானிக்கப்பட்ட குறித்த கிருமிநாசினி அறை இன்று (2020 ஏப்ரல் 15) புத்தலம் காவல் நிலையத்திக்கு வழங்கப்பட்டன. பொலிஸ் நிலையத்திற்கு தினமும் வருகை தரும் பொதுமக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக இந்த கிருமிநாசினி அறை வழங்கப்பட்டது.

மேலும், கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ் இந்த வகையான கிருமிநாசினி அறைகள் பல இடங்களுக்கு கடற்படை வழங்கியுள்ளது. மேலும், நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கடற்படை தொடர்ந்து சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.