பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 11 நபர்கள் புறப்பட்டு சென்றனர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 11 நபர்கள் இன்று (2020 ஏப்ரல் 16) தங்குடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

அதன்படி, பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்த 11 இலங்கையர்கள் இவ்வாரு இன்று (2020 ஏப்ரல் 16) மையத்தை விட்டு வெளியேறினர். மேலும், தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து வெளியேறிய அனைவரும் பி.சி.ஆர் ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. புறப்பட்ட குழுவினருக்கு தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழை இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தின் நிர்வாக அதிகாரியவர்களால் வழங்கப்பட்டது.

அதன் படி, தற்போது வரை, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முடித்த 68 பேர் மையத்தை விட்டு வெளியேறிவிட்டனர். மேலும் 31 இலங்கையர்கள் இந்த மையத்தில் தனிமைப்படுத்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.