சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 04 பேர் கடற்படையினரால் கைது

2020 ஏப்ரல் 16 ஆம் திகதி கோக்கிலாய் கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 04 பேரை கடற்படை கைது செய்தது.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் படி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் கோக்கிலாய் கடல் பகுதியில் நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இந்த 04 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையின் போது, 01 டிங்கி, 01 சட்டவிரோத வலை, 01 வெளிப்புற எரிப்பு இயந்திரம் மற்றும் பல மீன்பிடி உபகரனங்கள் ஆகியவை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர்கள் 25 முதல் 38 வயது வரையிலான கோக்கிலாய் மற்றும் புத்தலம் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், டிங்கி படகு, வெளிப்புற எரிப்பு இயந்திரம், மீன்பிடி வலை மற்றும் பிற மீன்பிடி உபகரனங்கள் ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புல்மூட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.