சட்டவிரோத மதுபானம் மற்றும் மதனமோதக மாத்திரைகள் கொண்ட ஒருவர் கடற்படையினரால் கைது

2020 ஏப்ரல் 16, அன்று பத்துலுஒய, கொத்தன்தீவு பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோத மதுபானம் மற்றும் மதனமோதக மாத்திரைகள் கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் பத்துலுஒய, கொத்தன்தீவு பகுதியில் ஒரு சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அங்கு சந்தேகத்திற்கிடமான ஒரு வீட்டை சோதனை செய்த போது விட்டிலிருந்த நபரிடமிருந்து சுமார் 02 லிட்டர் சட்டவிரோத மதுபானங்களையும், 37 மதனமோதக மாத்திரைகளையும் கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த நபர் மற்றும் போதைப்பொருட்கள் கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர் அதே பகுதியில் வசிக்கும் 44 வயதுடையவராக அடையாளம் காணப்பட்டார். இந்த சம்பவம் குறித்து உடப்புவ காவல்துறை மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகிறது.