கஞ்சா கொண்ட ஒருவர் (01) கடற்படையினரால் கைது

2020 ஏப்ரல் 16 ஆம் திகதி மன்னார் இலுப்புகடவாய் பகுதியில் கஞ்சா கொண்ட ஒரு (01) நபரை கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் இனைந்து கைது செய்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு சூழ்நிலையை கட்டுப்படுத்த மகத்தான பங்களிப்பை வழங்குகின்ற கடற்படை, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளையும் தொடர்கிறது. அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படையினர் குழு இலுப்புகடவாய் காவல்துறையினருடன் இனைந்து மன்னார் இலுப்புகடவாய் பகுதியில் சோதனை நடவடிக்கையொன்று மேற்கொண்டுள்ளது. அங்கு சந்தேகத்திற்கிடமான ஒரு வீட்டை சோதனை செய்த போது விட்டிலிருந்த நபரிடம் 100 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த நபர் மற்றும் கஞ்சா கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர் அதே பகுதியில் வசிக்கின்ற 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நொரொச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.