அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் சங்குகள் வைத்திருந்த ஒருவர் (01) கடற்படையால் கைது

2020 ஏப்ரல் 16 ஆம் திகதி இலங்கை கடற்படை மன்னார் உதவி மீன்வள அலுவலகத்துடன் இனைந்து மன்னார் கரிசல்பாடு பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் சங்குகளை வைத்திருந்த ஒரு சந்தேக நபரை கடற்படை கைது செய்தது.

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக இலங்கை கடற்படை நடத்திய மேலும் ஒரு சோதனை நடவடிக்கை, வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மன்னார் உதவி மீன்வள அலுவலகத்துடன் இனைந்து தலைமன்னார், கரிசல்பாடு பகுதியில் மேற்கொண்டனர். குறித்த நடவடிக்கையின் போது மீன்பிடி குடிசையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 460 சங்குகளை மீட்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பேசாலை பகுதியில் வசிக்கின்ற 40 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்ட சங்குகள் மற்றும் சந்தேக நபர் குறித்து மேலதிக சட்ட நடவடிக்கைகள் மன்னார் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் மேற்கொண்டு வருகிறது.