செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் (01) கடற்படையால் கைது

2020 ஏப்ரல் 18 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திற்கு வெளியே உள்ள கடல் பகுதியில் செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஒருவரை (01) கடற்படை கைது செய்தது.

இலங்கை கடல் பகுதியில் கடல் மற்றும் மீன் வளங்களை பாதுகாக்க இலங்கை கடற்படை தொடர்ந்து பாதுகாப்பு ரோந்து பணிகளை நடத்துகிறது. அதன் படி 2020 ஏப்ரல் 18 ஆம் திகதி திருகோணமலை துறைமுக கடல்பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான படகொன்று ஆய்வு செய்யப்பட்டதுடன் அங்கு செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்ட ஒருவர் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் கைது செய்யப்பட்டார். மேலும், ஒரு மீன்பிடிப் படகு, 485 கிலோ மீன் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர் 46 வயதுக்கு உட்பட்ட திருகோணமலை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டார், குறித்த நபர், டிங்கி படகு, மீன் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் இலங்கை கடலோர காவல்படை மூலம் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை மீன்வள உதவி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.