நிகழ்வு-செய்தி

தனியார் நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புகளால் ஒலுவில் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு பாதுகாப்பு மருத்துவ ஆடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

ஒலுவிலில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தும் மையத்தில் பணியாற்றும் கடற்படைப் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மருத்துவ உடைகள், கஹதுடுவ Hydramani Pentex நிறுவனம் மற்றும் The Fight Against Corona Team’ அமைப்பு ஆகியவற்றால் 2020 ஏப்ரல் 21 ஆம் திகதி தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தலைமையகத்தில் வைத்து கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

21 Apr 2020

தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் தொடர் இன்னிசை நிகழ்ச்சிகள்

கொழும்பு பகுதியில் மாடி கட்டடங்களில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் இன்னிசை நிகழ்ச்சி தொடரின் மேலும் ஒரு இசை நிகழ்ச்சி 2020 ஏப்ரல் 20 ஆம் திகதி மஹர, கடவத்தை பகுதி மையமாகக் கொண்டு இடம்பெற்றது.

21 Apr 2020

கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட மருத்துவ ஊழியர்களுக்கான சுகாதார ஆடைகள் தொகுப்பு பொது சேவை ஐக்கிய செவிலியர் சங்கத்திற்கு ஒப்படைக்கப்பட்டது

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான 150 மருத்துவ உடைகளை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் பொது சேவை ஐக்கிய செவிலியர் சங்கத்தின் தலைவர் முருத்தெத்துவே ஆனந்த தேரரிடம் இன்று (2020 ஏப்ரல் 21) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டன.

21 Apr 2020

கடற்படை பேலியகொடை மீன் சந்தையில் கிருமி நீக்கும் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது.

கடற்படை இன்று (2020 ஏப்ரல் 21) பேலியகொடை மீன் சந்தையில் அனைத்து இடங்களும் உள்ளடக்கி கிருமி நீக்கும் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது.

21 Apr 2020

சட்டவிரோத போதைப்பொருட்களுடன் 06 நபர்கள் கைது செய்ய கடற்படை உதவி

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் அதே வேளையில், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவும் இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக, 2020 ஏப்ரல் 20 அன்று தெற்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளில் மேற்கொள்ளப்பட்ட மூன்று நடவடிக்கைகளின் போது சட்டவிரோத போதைப்பொருட்களுடன் 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

21 Apr 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்பு கொண்டிருந்த மேலும் ஒரு நபர் (01) தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டார்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்பு கொண்டிருந்த ஜா-எல பகுதியில் வசிக்கும் ஒரு நபர் 2020 ஏப்ரல் 20 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்ப கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

21 Apr 2020

கடற்படை மேலும் பல கிருமி நீக்கும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது

நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட பல கிருமி நீக்கும் திட்டங்கள் 2020 ஏப்ரல் 19 மற்றும் 20 திகதிகளில் ராகமை வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலை, மஹவ மற்றும் காலி ரயில் நிலையங்கள் ஆகிய இடங்கள் மையப்படுத்தி இடம்பெற்றது.

21 Apr 2020

தடைசெய்யப்பட்ட பல வலைகள் கடற்படையினரால் கைது

நிலாவேலி மற்றும் மட்டக்களப்பு பகுதியில் ஏப்ரல் 19 மற்றும் 20 திகதிகளில் கடற்படை மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போது ஏராளமான சட்டவிரோத வலைகளை கடற்படை கைப்பற்றியது.

21 Apr 2020