நிகழ்வு-செய்தி

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட வணிகக் கப்பலில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது இறந்த நபரின் சடலத்தை கொண்டு வர கடற்படை உதவி

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட வணிகக் கப்பலான ‘MV GRACE’ கப்பலில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, மாரடைப்பால் திடீரென இறந்த நபரின் சடலத்தை கப்பலில் இருந்து இறக்குவதற்கும், அதை கப்பல் நிறுவனத்தின் உள்ளூர் முகவரிடம் ஒப்படைப்பதற்கும் இன்று (2020 ஏப்ரல் 22). இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

22 Apr 2020

Colombo International Container Terminals (CICT) நிறுவனம் மூலம் கடற்படைக்கு பாதுகாப்பு முகமூடிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக Colombo International Container Terminals நிறுவனம் பல பாதுகாப்பு முகமூடிகள் இன்று (2020 ஏப்ரல் 22) கடற்படை கலங்கரை விளக்கம் உணவகத்தில் வைத்து கடற்படைக்கு நன்கொடையாக வழங்கியது.

22 Apr 2020

தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் தொடர் இன்னிசை நிகழ்ச்சிகள்

கொழும்பு பகுதியில் மாடி கட்டடங்களில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் இன்னிசை நிகழ்ச்சி தொடரின் மேலும் ஒரு இசை நிகழ்ச்சி 2020 ஏப்ரல் 21 ஆம் திகதி கம்பஹ பகுதி மையமாகக் கொண்டு இடம்பெற்றது.

22 Apr 2020

சவுக்காடி கடற்கரையில் இருந்து RPG ரவையொன்று கடற்படையால் கண்டு பிடிக்கப்பட்டன

2020 ஏப்ரல் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம், மணிப்பாய் சவுக்காடி கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கடற்படை RPG ரவையொன்று கண்டுபிடித்தது.

22 Apr 2020

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் கடற்படையினரால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து (05) நபர்கள் 2020 ஏப்ரல் 21 ஆம் திகதி மூந்தலம களப்பு, உடப்புவ பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்துப் பணியின் பொது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

22 Apr 2020

இத்தாலி நோக்கி பயணித்த MSC Magnifica என பயணிகள் கப்பலில் பணியாற்றிய அனுர பண்டார ஹேரத் மற்றும் மேலும் இரண்டு நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் வீடு திரும்பிச் சென்றனர்.

MSC Magnifica என பயணிகள் கப்பலில் பணியாற்றிய போது 2020 ஏப்ரல் 06 ஆம் திகதி கடற்படையினரால் கரைக்கு அழைத்து வரப்பட்ட அனுர பண்டார ஹேரத் அவர்கள் மற்றும் மேலும் இரண்டு நபர்கள் (02) புஸ்ஸ கடற்படை முகாமில் நிருவப்பட்ட தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்து 2020 ஏப்ரல் 21 ஆம் திகதி தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

22 Apr 2020