தடைசெய்யப்பட்ட பல மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைது

2020 ஏப்ரல் 23 ஆம் திகதி மட்டக்களப்பு களப்பு பகுதியில் நடத்திய ரோந்துப் பணியின் போது மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 11 தடைசெய்யப்பட்ட வலைகள் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.

கடல் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கும் நோக்கில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களை கைது செய்ய இலங்கை கடற்படை பல ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி 2020 ஏப்ரல் 23 ஆம் திகதி கொடுவமட, மட்டக்களப்பு களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள ஒரு நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற 11 தடைசெய்யப்பட்ட வலைகளை கடற்படை கைப்பற்றியது.

பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பு மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டன.