சுகாதாரப் பாதுகாப்பு ஆடைகள் மற்றும் உபகரணங்கள் மக்கள் சீனக் குடியரசு மூலம் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான சுகாதாரப் பாதுகாப்பு ஆடைகள் மற்றும் உபகரணங்கள் இன்று (2020 ஏப்ரல் 22) கடற்படை தலைமையகத்தில் வைத்து மக்கள் சீனக் குடியரசு மூலம் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.p>

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மேலும், இந்த தகுதியான காரணத்தை பல்வேறு நபர்கள் பொருள் உதவிகளை வழங்குவதன் மூலம் ஆதரிக்கின்றன. அதன் படி இன்று (2020 ஏப்ரல் 24,) மக்கள் சீனக் குடியரசு மூலம் கடற்படைக்கு பல சுகாதாரப் பாதுகாப்பு ஆடைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா கடற்படை சார்பாக இந்த பொருட்களை ஏற்றுக்கொண்டார். மக்கள் சீனக் குடியரசின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் வென் டோங் இந்த சுகாதாரப் பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்களை கடற்படைக்கு வழங்கினார்.

மேலும், இந்த நன்கொடைகள் கடற்படைக்கு வழங்கியது தொடர்பாக கடற்படைத் தளபதி சீன மக்கள் குடியரசை பிரதிநிதித்துவப்படுத்தி வந்த புகழ்பெற்ற தூதுக்குழுவிற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.