ஊடக அறிக்கை

விடுமுறையில் இருந்தபோது பொலன்னறுவையைச் சேர்ந்த ஒரு கடற்படை வீரர் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதிசெய்த பின்னர், பாதிக்கப்பட்டவருடன் அலுவலகத்தில் பணிபுரிந்த வெளிசர கடற்படை தளத்தில் உள்ள ஏனைய கடற்படை வீரர்களுக்கும் தொற்று பரவியுள்ளது தொடர்பாக கண்டறிய பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், வெலிசர கடற்படை வளாகத்தை சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதனை முடக்கும் செயற்பாட்டினை கடற்படை உடனடியாக முன்னெடுத்தது. ஏறக்குறைய 4,000 கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் (194 திருமணமான குடியிருப்புகள் வெலிசரா கடற்படை வளாகத்தில் அமைந்துள்ளன) முகாமுக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் மிக விரைவில் பரிசோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். அத்துடன் விடுமுறையில் இருந்த பாதிக்கப்பட்ட கடற்படை வீரருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய கடற்படை வீரர்கள் கடற்படைத் தளத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பின்னணியில், இலங்கை கடற்படை ஏற்கனவே நிறுவன அளவில் நன்கு திட்டமிடப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பணியில் ஈடுபட்டுள்ளதுடன், அதன் நடவடிக்கைகள் தற்போது சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலுக்கேற்ப இடம் பெற்று வருகின்றன.

எனவே, கடற்படை வீரர்களின் ஆரோக்கியம் தொடர்பாக , பொது மக்கள் தேவையற்ற முறையில் கவலையடைய தேவையில்லை. மேலும், கடற்படை வீரர்கள் விடுமுறையில் இருந்தால் தற்காலிகமாக வீடுகளில் அடைத்து வைப்பதற்கும், வெலிசர கடற்படை வளாகத்தில் உள்ள அனைத்து கடற்படை நடவடிக்கைகளையும் சுகாதார பரிசோதனைகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்குவதற்கும், வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், விடுமுறைக்கு அல்லது உத்தியோகபூர்வ கடமைகளுக்காக முகாமுக்கு வெளியே இருக்கும் கடற்படையினர்கள் பற்றிய அனைத்து தகவல்களும் கடற்படை தலைமையகத்தில் உள்ளன. விடுமுறையில் அல்லது வளாகத்திற்கு வெளியே இருக்கும் எந்தவொரு நபரைப் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்பும் எவரும் பின்வரும் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

செயல்பாட்டு அறை கடற்படை தலைமையகம்

தொலைபேசி எண் - 0112445368/ 0117192251

தொலைநகல் எண் - 0112441454

வாட்ஸ்அப் - 0772201365

மின்னஞ்சல் - nhqdno@yahoo.com

இவ் அறிக்கை இலங்கை மக்களுக்கு தெரிவிக்க வெளியிடப்பட்டுள்ளது