கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த LOLC நிறுவனம் மற்றும் மனுசத் தெரன திட்டத்தால் கடற்படைக்கு சுகாதாரப் பாதுகாப்பு ஆடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான சுகாதாரப் பாதுகாப்பு ஆடைகள் இன்று (2020 ஏப்ரல் 30) கடற்படை தலைமையகத்தில் வைத்து LOLC நிறுவனம் மற்றும் மனுசத் தெரன திட்டத்தால் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மேலும், இந்த தகுதியான காரணத்தை பல்வேறு நபர்கள் பொருள் உதவிகளை வழங்குவதன் மூலம் ஆதரிக்கின்றன. அதன் படி இன்று (2020 ஏப்ரல் 30) LOLC நிறுவனம் மற்றும் மனுசத் தெரன திட்டத்தால் கடற்படைக்கு பல சுகாதாரப் பாதுகாப்பு ஆடைகள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வுக்காக LOLC நிருவனத்தின் தலைமை இயக்க அதிகாரி கித்சிரி குணவர்தன உட்பட பிரதிநிதிகள் குழு மற்றும் மனுசத் தெரன ஊழியர்கள் குழு பங்கேற்றனர்.

மேலும், வழங்கப்பட்ட இந்த நன்கொடைகளுக்கு கடற்படைத் தளபதி LOLC நிருவனத்தின் மற்றும் மனுசத் தெரன திட்டத்தின் அனைத்து பணியாளர்களுக்கும் கடற்படை சார்பாக நன்றி தெரிவித்தார்.