யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் களப்புக்கு விழுந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தை மீட்க கடற்படை உதவி

காரைநகர் பொன்னாலை பாலம் அருகே களப்புக்கு விழுந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தை மீட்க இன்று (2020 மே 01) கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் காரைநகரில் இருந்து கொழும்புக்கு சென்றுக் கொண்டிருந்த காரைநகர் டிப்போவுக்குச் சொந்தமான ஒரு பேருந்து 2020 ஏப்ரல் 30 ஆம் திகதி காரைநகர் பொன்னாலை பாலம் அருகே களப்புக்கு விழுந்ததுடன் குறித்த பேருந்தை மீட்கும் நடவடிக்கைகள் 2020 மே 01 ஆம் திகதி கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது. கடற்படை துணைத் தலைமை பணியாளர் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் உத்தரவின் பேரில், வடக்கு கடற்படைப் பகுதியில் இணைக்கப்பட்ட கடற்படையினர் தங்களுடைய உபகரணங்கள் மற்றும் கிரேன் ஆகியவற்றைப் பயன்படுத்தி, இந்த பேருந்தை ஒரு கடினமான பணியின் பின்னர் மிட்டனர். அதன் பின் மீட்கப்பட்ட பேருந்து கடற்படை பேரழிவு வாகனத்தால் ஊர்காவற்துறை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.