தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள் கடற்படையினரால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள் 2020 மே 01 ஆம் திகதி திருகோணமலை துறைமுக கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் திருகோணமலை துறைமுக கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். அங்கு ஒரு டிங்கி படகு, ஒரு வெளிப்புற எரிப்பு இயந்திரம் மற்றும் தடைசெய்யப்பட்ட ஒருவலையையும் கடற்படை கைப்பற்றியது.

சந்தேக நபர்கள் 24 முதல் 38 வயதிற்குட்பட்ட திருகோணமலை சீன துறைமுகம் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர், கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்ட இந்த நபர்கள், டிங்கி படகு, வெளிப்புற எரிப்பு இயந்திரம் மற்றும் வலை தொடர்பான மேலதிக விசாரணைகள் திருகோணமலை கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் அலுவலகம் மேற்கொள்கின்றது.