ஹெரொயின் கொண்ட சந்தேக நபரை கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் காலி ஊழல் தடுப்புப் பிரிவு இனைந்து 2020 மே 02 ஆம் திகதி ஹெரொயின் கொண்ட ஒருவரை காலி,தலாபிடிய பகுதியில் வைத்து கைது செய்தனர்.

போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கும் தேசிய பணிக்கு ஆதரவாக இலங்கை கடற்படை மேற்கொண்ட பல நடவடிக்கைகள் மூலம் ஏராளமான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்படி, 2020 மே 02 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைகயின் கடற்படையினர் காலி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் ஒத்துழைப்புடன் காலி, தலாபிடிய பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு நபரை சோதனை செய்தனர் அங்கு அவரிடமிருந்து சுமார் 1760 மில்லிகிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் அதே பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் ஹெரொயினுடன் மேலதிக விசாரணைக்காக காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.