தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள் கடற்படையினரால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள் மற்றும் இரண்டு படகுகள் (02) 2020 மே 02 ஆம் திகதி முந்தம்பிட்டி, பெரியஆரு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படையால் கைது செய்யப்பட்டது.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் முந்தம்பிட்டி, பெரியஆரு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள், இரண்டு தடைசெய்யப்பட்ட வலைகள், இரண்டு மீன்பிடி படகுகள் மற்றும் இரண்டு வெளிப்புற எரிப்பு இயந்திரங்கள் கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் 20 முதல் 32 வயதிற்குட்பட்ட மன்னார் பல்லெமுனை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர், கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்ட இந்த நபர்கள், தடைசெய்யப்பட்ட வலைகள், டிங்கி படகுகள் மற்றும் வெளிப்புற எரிப்பு இயந்திரங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் இலுப்புகடவாய் பொலிஸார் மேற்கொள்கின்றது.