கொடவெஹெர பகுதி மையமாக கொண்டு மேலும் ஒரு கிருமி நீக்கும் திட்டம் கடற்படை மேற்கொண்டுள்ளது

நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட மேலும் ஒரு கிருமி நீக்கும் திட்டம் 2020 மே 03 ஆம் திகதி குருநாகல் மாவட்டத்தில், கொடவெஹெர பிரதேச செயலகத்தில் உள்ள திகந்னேவ மற்றும் கும்புக்வெவ கிராமங்கள் மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டன.

கொடவெஹெர பொது சுகாதார மருத்துவ அதிகாரியின் வேண்டுகோளின் பேரில் வடமேற்கு கடற்படை கட்டளையின் வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) அவசரநிலை பதிலளிப்பு பிரிவு மூலம் இந்த கிருமி நீக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. வைரஸ் பரவாமல் தடுக்க இந்த பகுதிகளின் அனைத்து இடங்களையும் முறையாக கிருமி நீக்கம் செய்ய கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்காலத்திலும் வைரஸ் பரவுவதைத் தடுக்க பொது இடங்கள் மையமாகக் கொண்டு பல கிருமி நீக்கும் திட்டங்களை செயல்படுத்த கடற்படை திட்டமிட்டுள்ளது.