Nilkamal Eswaran Plastics (Pvt) Ltd மூலம் கடற்படைக்கு தேவையான மருத்துவமனை படுக்கைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான மருத்துவமனை படுக்கைகள் 2020 மே 06 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் வைத்து Nilkamal Eswaran Plastics (Pvt) Ltd நிருவனம் மூலம் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மேலும், இந்த தகுதியான காரணத்தை பல்வேறு நபர்கள் பொருள் உதவிகளை வழங்குவதன் மூலம் ஆதரிக்கின்றன. அதன் படி இன்று Nilkamal Eswaran Plastics (Pvt) Ltd நிருவனத்தின் அதிகாரிகள் பல மருத்துவமனை படுக்கைகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவிடம் ஒப்படைத்தனர்.

மேலும், வழங்கப்பட்ட இந்த நன்கொடைகளுக்கு கடற்படைத் தளபதி Nilkamal Eswaran Plastics (Pvt) Ltd நிருவனத்தின் அதிகாரிகள் அனைவருக்கும் கடற்படை சார்பாக தனது நன்றியைத் தெரிவித்தார்.