மேலும் இரண்டு கடற்படை வீரர்கள் ஐ.டி.எச் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மேலும் 02 கடற்படை வீரர்கள் பி.சி.ஆர் சோதனையின் பின் உடலில் குறித்த வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் இன்று (2020 மே 07) வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்.

வெலிசர கடற்படை தளத்தில் பணியாற்றி வந்த இந்த இரண்டு கடற்படை வீரர்களும் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய காரணத்தினால் சிகிச்சைக்காக ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சையின் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகளின்படி, கடற்படை வீரர்களின் உடல்களில் குறித்த வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின் வைத்தியசாலையில் இருந்து இவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

மேலும், வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய இந்த கடற்படை வீரர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த நபர்கள் உட்பட கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 14 கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.