சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை துறைமுகத்திற்கு வெளி கடல் பகுதியில் 2020 மே 07 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் திருகோணமலை துறைமுகத்திற்கு வெளி கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்களுடன் ஒரு தடைசெய்யப்பட்ட வலை (01), ஒரு மீன்பிடி படகு (01) மற்றும் ஒரு வெளிப்புற எரிப்பு இயந்திரம் (01) கைது செய்யப்பட்டது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திருகோணமலை, கின்னியா பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர், கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்ட சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட வலை, டிங்கி படகு மற்றும் வெளிப்புற எரிப்பு இயந்திரம் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.