வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை, மலைமுந்தால் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் 2020 மே 09 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

வெடிபொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் கடல் சுற்றுச்சூழல் அழிக்கப்படுவதைத் தடுக்க கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 2020 மே 09 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் திருகோணமலை, மலைமுந்தால் கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது வெடி பொருட்களை (டைனமைட்) பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இங்கு வெடி பொருட்களை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 10 கிலோ கிராம் மீன், ஒரு படகு, நீர்முழ்கி உபகரணங்கள் மற்றும் ஒரு கையடக்க தொலைபேசி கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டன.

சந்தேக நபர்கள் 28-33 வயதுக்குட்பட்ட மொஹோத்துவரம் மற்றும் இச்சலம்பத்து பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர்கள் திருகோணமலை மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.